108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் கணக்கிடப்பட்டன.
இந்த கணக்கெடுப்பில், ரொக்கமாக ரூ.77,92,825, 70.100 கிராம் தங்கம், 625 கிராம் வெள்ளி மற்றும் 177 வெளிநாட்டு ரூபாய் தாள்கள் காணிக்கையாக கிடைத்தன.
கோயில் இணை ஆணையர் சிவராம் குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த பணியில், வங்கி ஊழியர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கலந்து கொண்டு உண்டியல்களில் இருந்த காணிக்கைகளை முறையாக எண்ணி கணக்கிட்டனர்.
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இந்த உண்டியல் திறப்பு நிகழ்வில், பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் கருடாழ்வார் சன்னதி அருகே உள்ள மண்டபத்தில் கணக்கிடப்படும் , கணக்கிடும் பணியானது கோவில் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்

