விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே டிக்கெட் கவுண்ட்டர் எதிரே பயணிகளின் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு வசதியாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் லாக்கர் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக 11 அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த வசதியை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். பயணிகள் தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்து ஓடிபி கொடுத்து அதன் மூலம் வரும் கியூ ஆர் கோடில் பணம் செலுத்தி தங்களுக்கு தேவையான அளவிலான அறைகளையும், நேரத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம். ஒருமுறை லாக்கர் எடுத்தால் மூன்று முறை திறந்து மூடும் வசதியுடன், 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் பாதுகாப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது.
News
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் டிஜிட்டல் லாக்கர் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
The News Outlook
🕒 27 ஜூலை, 2026, 01:14 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
